போச்சம்பள்ளி அருகே ஆண் ஒருவர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்பு !

போச்சம்பள்ளி அருகே ஆண் ஒருவர்  தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்பு !

சடலமாக மீட்பு

போச்சம்பள்ளி அருகே ஆண் ஒருவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டது.

போச்சம்பள்ளி அருகே ஆண் ஒருவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்பு : கொலையா? தற்கொலையா? கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த களர்பதி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே தண்ணீர் செல்லும் கால்வாய் ஒட்டியவாறு உள்ள நாவல் மரத்தில் ஆண் ஒருவர் தூக்கிட்டு கயிற்றில் தொங்கியுள்ளார்.

இதனை அப்பகுதியில் சென்ற சிலர் கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் புளியம்பட்டி பஞ்சாயத்து இந்திராபுரி கிராமத்தைச் சேர்ந்த வெங்கட் என்பதும் அவரும் அவரது மனைவியும் கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னர் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மனைவி கணவனுடன் சண்டையிட்டு கோபித்துக் கொண்டு சேலத்தில் உள்ள அவர் அம்மா வீட்டிற்கு சென்றதாகவும் இந்நிலையில் அவரது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story