மாசார்பட்டி அருகே வீட்டிற்குள் புகுந்து தங்க நகையை திருடியவர் கைது

மாசார்பட்டி அருகே வீட்டிற்குள் புகுந்து தங்க நகையை திருடியவர் கைது

கோப்பு படம் 

மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டிற்குள் புகுந்து தங்க நகையை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலக்கரந்தை நடுத்தெருவை சேர்ந்த கார்த்திகைவேலன் மனைவி ஜெயந்தி (36) என்பவர் கடந்த 05.06.2024 அன்று காலை வீட்டை பூட்டி வேலைக்கு சென்றுவிட்டு பின்னர் மாலை வந்து பார்த்தபோது வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூபாய் 20,000/- மதிப்புள்ள ½ சவரன் தங்க நகை திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து ஜெயந்தி அளித்த புகாரின் பேரில் மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் எட்டையாபுரம் நடுவீர்பட்டியைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் மாரிச்செல்வம் (47) என்பவர் மேற்படி ஜெயந்தியின் வீட்டிற்குள் புகுந்து தங்க நகைகளை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து மாசார்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேகர் வழக்கு பதிவு செய்து எதிரி மாரிசெல்வத்தை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 20,000/- மதிப்புள்ள ½ சவரன் தங்க நகையும் பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story