சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் போக்சோவில் வழக்கு பதிவு !

சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் போக்சோவில் வழக்கு பதிவு  !

போக்சோவில் கைது

அச்சிறுபாக்கம் அருகே 17 வயது சிறுமியிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர் மற்றும் அவரது தந்தை மீது, 'போக்சோ' வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அச்சிறுபாக்கம் அடுத்த அனந்தமங்கலம் அருகே, சென்னேரி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர் மற்றும் அவரது தந்தை மீது, 'போக்சோ' வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அச்சிறுபாக்கம், அனந்தமங்கலத்தை அடுத்த சென்னேரி கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார், 32, என்பவர், பக்கத்துவீட்டில் வசிக்கும் 17 வயது சிறுமியின் வீட்டிற்கு, யாரும் இல்லாத நேரத்தில் சென்று, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், சிறுமி கூச்சலிட்டு கத்தியுள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு அங்கு சென்ற வினோத்குமாரின் தந்தை வேலாயுதம், சிறுமியின் கையைப் பிடித்து, சத்தம் போடாதே என மிரட்டியுள்ளார். மேலும், சிறுமியின் கையை வேலாயுதம் பிடித்துக்கொள்ள, வினோத்குமார் சிறுமியை அடித்து, உதைத்துள்ளார். இந்நிலையில், விவசாயப் பணிக்கு சென்ற பெற்றோர் வந்தவுடன், அவர்களிடம் நடந்தவற்றை கூறிய பாதிக்கப்பட்ட சிறுமி, பெற்றோருடன் சென்று மேல்மருவத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, வினோத்குமார், வேலாயுதம் ஆகிய இருவர் மீதும் போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags

Next Story