வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற நபர் கைது

வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற நபர் கைது
பாவூர்சத்திரம் அருகே வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற நபர் கைது
தென்காசி மாவட்டம், ஆவுடையானூர் பகுதியில் வீடு புகுந்து திருட முயற்சித்த இளைஞரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் , ஆலங்குளம் அருகே பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆவுடையானூர் பகுதியில் வசித்து வரும் அரிகரசுதன் என்பவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டின் கதவை ஒருவர் திறக்க முயற்சி செய்து கொண்டிருப்பதாக தொலைபேசியில் அவருக்கு கிடைத்த தகவலின் பேரில் அவரும் அவரது உறவினரும் வீட்டுக்கு வந்து வீட்டை திறந்து திருட முயற்சி செய்த நபரை பிடித்து பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் பாவூர்சத்திரம் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் உமாமகேஸ்வரி விசாரணை மேற்கொண்டு மேற்படி திருடமுயன்ற ஆவுடையானூர் மாடக் கண்ணுப்பட்டி தெருவை சேர்ந்த வாஷிங்டன் என்பவரின் மகன் ஹரிஹரசுதன் ( வயது 22) மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார்.

Tags

Next Story