கங்கைகொண்டானில் கஞ்சா வைத்திருந்தவர் அதிரடி கைது

கங்கைகொண்டானில் கஞ்சா வைத்திருந்தவர் அதிரடி கைது

பைல் படம்

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் கஞ்சா வைத்திருந்தவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் நேற்று (மார்ச் 1) இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது கங்கைகொண்டான் ரேஷன் கடை அருகே மருதுபாண்டி என்பவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுள்ளார்.அவர் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை சிறுவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் மருதபாண்டியை கைது செய்து அவரிடமிருந்து 35 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story