தடை செய்யப்பட்ட பட்டாசு திரியை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது

தடை செய்யப்பட்ட பட்டாசு திரியை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது
கைது 
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட பட்டாசு திரியை விற்பனைக்கு வைத்திருந்த பாலமுருகன் என்பவர் கைது
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் சுப்புலட்சுமி. இவர் தனது உதவியாளர் உடன் ஆமத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது அங்கு தகர செட்டில் அரசு அனுமதியோ உரிமமோ இல்லாமல் பட்டாசு தயாரிக்க பயன்படும் திரியை ஏழு கட்டுகள் வைத்து விற்பனை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அவர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விற்பனைக்கு வைத்திருந்த திரியை பறிமுதல் செய்து பாலமுருகன் என்பவரை கைது செய்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story