ஜமுனாமரத்தூர் அருகே மான்வேட்டைக்கு சென்றவர் குண்டு பாய்ந்து பலி

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் தாலுகா தென்மலை அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் பிரகாஷ் சக்திவாசன் மேலும் உள்ளிட்ட நான்கு பேர் ஜவ்வாது மலைப்பகுதியில் மான் வேட்டைக்காக சென்றபோது வனப்பகுதியில் மானை துப்பாக்கியால் சுட முயன்ற போது வேட்டைக்குச் சென்ற சக்திவேல் என்ற இளைஞர் துப்பாக்கி குண்டு பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் பிரகாஷ் என்ற இளைஞர் முகத்தில் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் வனத்துறை இடமோ காவல்துறையிடமோ தகவல் அளிக்காமல் உடலை அடக்கம் செய்ய முயன்ற போது புதுப்பாளையம் மற்றும் ஜமுனாமரத்தூர் போலீசார் உயிரிழந்த சக்திவேலின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மான் வேட்டைக்கு சென்ற போது எதிர்பாராத விதமாக துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் உடன் சென்ற இரண்டு நபர்களை விசாரணைக்காக செங்கம் போலீசார் அழைத்து வந்துள்ளனர் மேலும் தலைமறைவாகி உள்ள நபரை தேடி வருகின்றனர்

Tags

Next Story