பள்ளிபாளையத்தில் மாட்டை காப்பாற்ற சென்றவர் கிணற்றில் விழுந்து பலி

பள்ளிபாளையத்தில் மாட்டை காப்பாற்ற சென்றவர் கிணற்றில் விழுந்து பலி

இறந்த வாலிபர்

பள்ளிபாளையத்தில் மாட்டை காப்பாற்ற சென்றவர் கால் இடறி கிணற்றில் விழுந்து பலியானார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 19. கூலி. இவர் நேற்றுமுன்தினம் இரவு 07:00 மணியளவில், மாடு மேய்ந்து கொண்டிருந்த மாடு ஒன்று, அங்குள்ள கிணற்றில் விழ இருந்ததால், அதனை காப்பாற்ற ஓடி சென்ற போது, கால் இடறி கிணற்றுக்குள் விழுந்தார்.

அக்கம் பக்கம் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பேரில், வெப்படை தீயணைப்பு படையினர் நேரில் வந்து கிணற்றில் விழுந்த ஆறுமுகத்தை மீட்டனர். இவரை பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, இவரை பரிசோதித்த டாக்டர் இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினார்.

இவரது தந்தை அர்த்தனாரி பள்ளிபாளையம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story