திருமணமான இளம் பெண் மாயம்

தலைவாசலில் வீட்டை விட்டு வெளியே சென்ற திருமணமான இளம் பெண் காணவில்லை என தாயார் புகாரளித்துள்ளார்.

தலைவாசல்-வீட்டை விட்டு வெளியே சென்ற திருமணமான இளம் பெண் மாயம். மகளைக் காணவில்லை தாயார் புகார். கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா, சத்துவார் பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி தேவயானி வயது 25. தேவயானிக்கும், விஜயகுமாருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, கடந்த ஒரு வருடமாக இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனிடையே, கடந்த ஒரு மாத காலமாக தேவயானி மனநலம் சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், மே 22ஆம் தேதி காலை 11 மணியளவில், வீட்டை விட்டு வெளியே சென்ற தேவயானி பின்னர் வீடு திரும்பவில்லை.

வழக்கமாக தேவயானி செல்லும் இடங்களில் தேடிப் பார்த்தும்,அவர்களது உறவினர் வீட்டில் விசாரித்து பார்த்தும், எவ்வித தகவலும் கிடைக்கப் பெறாததால், இது தொடர்பாக தனது மகளை காணவில்லை என தேவயானி தாயார் தங்கம்மாள் வயது 65 என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர்,சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மாயமான தேவயானியை தேடி வருகின்றனர் பாலவிடுதி காவல்துறையினர்.

Tags

Next Story