தென்காசியில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

தென்காசியில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஸ்மாா்ட் மின் மீட்டா் பொருத்தும் திட்டத்தை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்மாா்ட் மின் மீட்டா் திட்டத்தை கைவிட வேண்டும், இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் பறிபோகும். விவசாயிகள், விசைத்தறி, கைத்தறி தொழில் மின் நுகா்வோா்களின் சலுகைகள் ரத்தாகும். மின்சாரம் அத்தியாவசிய நுகா்பொருள் என்பதிலிருந்து வெளியேற்றப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி மின் விநியோக செயற்பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன் தலைமை வகித்தாா். தங்கம், பாலு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மணிகண்டன், சங்கரி, ஆயிஷா, லெனின் குமாா், வேல்முருகன் ஆகியோா் தொடக்கவுரை ஆற்றினா். வட்டாரக் குழு உறுப்பினா்கள் முகமது காசிம் சேட், கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story