திருக்கழுக்குன்றத்தில் மாபெரும் ரத்த தான முகாம்

திருக்கழுக்குன்றத்தில் மாபெரும் ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்

திருக்கழுக்குன்றத்தில் மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலத்தில் இயங்கி வரும் சத்ய சாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருக்கழுக்குன்றம் லயன்ஸ் கிளப், டான் போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது.. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏ வீ. தமிழ்மணி,திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ரத்த தான முகாமை துவக்கி வைத்தனர்.. முகாமில் பேசிய திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் இளைஞர்களிடம் தான் மனித நேயம் அதிகம் உள்ளது என்றும், இளைஞர்களால் தான் அனைத்தையும் சாதிக்கக்கூடிய தனித் திறமை உண்டு எதையும் கொடுப்பதற்கும் தயாராகுபவர்கள் இளைஞர்கள் மட்டுமே அதனால்தான் இளைஞர்களை மையப்படுத்தி முகாமை துவக்கி இருக்கிறோம் என்றார். பின்னர் ரத்ததானம் வழங்கும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.. முகாமில் மருத்துவமனை மருத்துவர்கள்,லயன்ஸ் கிளப் பொறுப்பாளர்கள் சங்கர், லியோ ஸ்டேன்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story