பெரம்பலூரில் சாலையோர வியாபாரிகள் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

பெரம்பலூரில்  சாலையோர வியாபாரிகள் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

பெரம்பலூர் சாலையோர வியாபாரிகள் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் வரதராஜ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குள் வண்டிப்பேட்டை வசூலை கைவிட வேண்டும், பெரம்பலூர் நகராட்சியில் வெண்டர் கமிட்டி கூட்டத்தை கூட்டிட வேண்டும் ,பெரம்பலூர் நகராட்சி அனைத்து வார்டுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்திடவும், ,பெரம்பலூர் நகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கலைந்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஜூன் மாதம் 6 ஆம் தேதி பெரம்பலூர் நகராட்சி N அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ். அகஸ்டின், சாலையோர வியாபார சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரங்கராஜ் ,மாவட்ட நிர்வாகிகள் செல்லதுரை ,முருகன், குணசேகரன், ராமசாமி பரமசிவம், மணி சீனிவாசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story