அரியலூரில் ஆட்சியர், எம்எல்ஏக்கள் பங்கேற்ற சுகாதார பேரவை கூட்டம்

அரியலூரில் ஆட்சியர், எம்எல்ஏக்கள் பங்கேற்ற சுகாதார பேரவை கூட்டம்

கூட்டத்தில் கலந்து கொண்ட ஆட்சியர்

அரியலூரில் ஆட்சியர், எம்எல்ஏக்கள் பங்கேற்ற சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துதுறையின் சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் கலந்து கொண்டனர். இதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளின் சுகாதார தரத்தை மேம்படுத்தவும்,

மேலும் உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் கலந்து ஆலோசிக்கபட்டது. இதில் அனைத்து துறை அலுவலர்கள், சுகாதார துறை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story