இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்தவர் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை

இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்தவர் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை

தூக்கிட்டு தற்கொலை

இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்தவர் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை. போலீசார் விசாரணை
திருச்சி மாவட்டம், மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள ஒரு கடைக்கு முன்பு ஒரு ஆண் கேபிள் ஒயரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் மணப்பாறை போலீசார் மணப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சென்று இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் இறந்தவர் புதுக்கோட்டை மாவட்டம், தேக்காட்டூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த அன்ரணி பெர்ணான்டோ (வயது 45) என்பதும் வேலைக்கு செல்வதாக நேற்று மாலை வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story