பேருந்து முன் பாய்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை!

பேருந்து முன் பாய்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை!

தற்கொலை

சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சாய்பாபா காலணி அருகே சாலையில் நின்றிருந்த நபர் திடிரென அவ்வழியாக வந்த தனியார் பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை சாய்பாபா காலணியை சேர்ந்தவர் ஆனந்த் (40).இவருக்கு மன நலம் பாதிப்பு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.கடந்த 21 ஆம் தேதி ஆனந்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சிகிச்சைக்காக அவரது தாய் மற்றும் பாட்டி பேருந்தில் அழைத்துச் செல்ல இரவு 9 மணியளவில் சாய்பாபா காலணி பேருந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளனர். பேருந்துக்காக காத்திருந்த போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து முன் ஆனந்த் திடீரென பாய்ந்தார்.இதில் பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மேற்கு போக்குவரத்து குற்றப்புலனாய்வு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனந்த் தனியார் பேருந்து முன் பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story