ஊத்தங்கரை அருகே லிப்ட் கேட்டு பைக்கை பறித்து சென்ற மர்மநபர்

ஊத்தங்கரை அருகே லிப்ட் கேட்டு பைக்கை பறித்து சென்ற மர்மநபர்

மர்மநபர்

ஊத்தங்கரை அருகே லிப்ட் கேட்டு சென்று மிரட்டி பைக்கையும், செல்போனையும் பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த அருள்குமார் என்பவர் மத்தூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது சரவண பவன் ஹோட்டல் அருகே நடந்து சென்ற நபர் இரு சக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதில் அவர் உடன் அமர்ந்து சென்ற பொழுது மத்தூர் குமார் மெடிக்கல் அருகே அருள்குமார் என்பவரை அடித்து விட்டு இருசக்கர வாகனத்தையும் செல்போனை பிடுங்கி கொண்ட மர்ம நபர் தப்பி ஓடிள்ளார் . இது குறித்து மத்தூர் காவல் துறையில் புகார் அளிக்க சென்ற பொழுது விவரத்தைக் கேட்ட தோடு சி எஸ் ஆர் கூட பதிவு செய்யாமல் அனுப்பி வைத்தது காவல் துறை. தனது இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்ட மர்ம நபருடன் அருகே இருந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் பொழுது இருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story