வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் தங்க நகையை களவாடிய மர்மநபர்...

வீட்டின் கதவை உடைத்து  4 பவுன் தங்க நகையை களவாடிய மர்மநபர்...

காவல்துறை

வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகையை களவாடிய மர்மநபர்.களவாடி சென்ற மர்ம நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.

வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகையை களவாடிய மர்மநபர். கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, காக்காவாடி அருகே உள்ள குள்ளம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நல்லையன் மகன் வெங்கடேசன். இவர் ஏப்ரல் 09-ம் தேதி காலை 10 மணி அளவில், தனது வீட்டை பூட்டிவிட்டு தனது வேலை விஷயம் தொடர்பாக வெளியூர் சென்று விட்டார்.

மீண்டும் அன்று மாலை 6:30 மணி அளவில் வீடு திரும்பிய போது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 2- பவுன் நெக்லஸ், 2-பவுன் தங்க செயின், ஆக 4-பவுன் தங்க நகைகள் களவாடப்பட்டது கண்டு மீண்டும் அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள், அங்கு தடயங்களை ஆய்வு செய்தனர்.

ஆய்வின் முடிவில் மூன்று தடையங்கள் கிடைக்கப்பெற்று, அதனை பதிவு செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து,வீட்டின் கதவை உடைத்து, தங்க நகைகளை களவாடி சென்ற மர்ம நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags

Next Story