கடற்கரையில் ஒதுங்கிய சீலிடப்பட்ட மர்ம பெட்டியால் பரபரப்பு

கடற்கரையில் ஒதுங்கிய  சீலிடப்பட்ட மர்ம பெட்டியால் பரபரப்பு

மர்ம பெட்டி

சீர்காழி அருகே கடற்கரையில் ஒதுங்கிய சீலிடப்பட்ட மர்ம பெட்டியை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் விசைப்படகு மற்றும் பைபர் படகுகள் மூலம் கடலுக்குச் சென்று மீன் பிடித்து தொழில் செய்து வருகின்றனர். இன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை . இந்நிலையில் இன்று காலை , கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை பார்க்கச் சென்ற மீனவர்கள், கடற்கரையில் ஒன்றரை அடி நீலமும், ஒரு அடி அகலமும் கொண்ட சந்தன கலர் பெயிண்ட் பூசப்பட்ட, சீலிடப்பட்ட இரும்பு பெட்டி ஒன்று கரை ஒதுங்கி இருப்பதை கண்டனர்.

தொடர்ந்து மர்மமான முறையில் கரை ஒதுங்கியுள்ள இரும்பு பெட்டி குறித்து கடல் சார் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு, கடலோர காவல் குழுமம், க்யூ பிரிவு, தனிப்பிரிவு மற்றும் சீர்காழி சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மர்ம பெட்டியை கைப்பற்றி மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர் பெட்டி முழுவதுமாக சீல் இடப்பட்டுள்ளதால் உள்ளே என்ன உள்ளது என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமுல்லைவாசல் கடற்கரையில் மர்ம பெட்டி கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சீர்காழி அருகே கடற்கரையில் ஒதுங்கிய சீலிடப்பட்ட மர்ம பெட்டியை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story