பிறந்தபெண் குழந்தை முட்புதரில் உயிருடன் வீச்சு

பிறந்தபெண் குழந்தை முட்புதரில் உயிருடன் வீச்சு

பிறந்தபெண் குழந்தை முட்புதரில் உயிருடன் வீச்சு,

பிறந்த பெண் குழந்தையை முட்புதரில் வீசிச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து, தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தூத்துக்குடி விவேகானந்தர் காலனி கடற்கரை பகுதி அருகே இம்மாதம் 2ம் தேதி குறை பிரசவத்தில் பிறந்து 40 நாட்களே ஆன பெண் குழந்தையை மர்ம நபர்கள் முட்புதரில் வீசி சென்றுள்ளனர். உயிருடன் இருந்த அந்த பெண் குழந்தையை அருகில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக சிகிச்சையில் இருந்த அந்தக் குழந்தை, கடந்த 25ஆம் தேதி ரத்தத்தில் கிருமி தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

தொடர்ந்து தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை முட்புதரில் வீசி சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story