எடப்பாடி அடுத்த சித்தூரில் 11 ஆடுகளை கடித்து குதறிய வெறிநாய்கள்

எடப்பாடி அடுத்த சித்தூரில் 11 ஆடுகளை கடித்து குதறிய வெறிநாய்கள்

இறந்த ஆடுகள் 

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் சித்தூர் ஊராட்சிக்குட்பட்ட ரெட்டிபட்டி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த மலர்கொடி என்பவர் 11 ஆடுகளை தனது ஆட்டுப்பட்டியில் அடைத்து வைத்துவிட்டு உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்று விட்டார். இந்நிலையில் பட்டப் பகலில் கூட்டமாக சென்ற நாய்கள் ஆட்டுப்பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடுகளை கடித்துக் குதறியது. இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதை தொடர்ந்து நாய்கள் அனைத்தும் தப்பி சென்று விட்டது. தொடர்ந்து அங்கு சென்று பார்த்த போது ஆடுகள் அனைத்தும் கழுத்தில் கடிபட்டு ரத்த வெள்ளத்தில்கிடந்ததுள்ளது. அப்போது நான்கு ஆடுகள் உயிரிழந்த நிலையிலும் 7ஆடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மிகவும் கவலைக்கிடமாகவும் இருந்தது. இது குறித்து சித்தூர் கால்நடை மருத்துவரிடம் தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து வந்த கால்நடை மருத்துவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள ஆடுகளுக்கு மருத்துவம் பார்த்தார். இத்தகவலறிந்த சித்தூர் வருவாய் துறை மற்றும் பூலாம்பட்டி காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கூட்டமாக வெறித்தனமாக செல்லும் நாய்களை பிடித்து தடுப்பூசி போட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி ஆடு வளர்ப்பு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story