கண்டக்டரை மிதித்து மண்டையை உடைத்த பயணி

கண்டக்டரை மிதித்து மண்டையை உடைத்த பயணி
பைல் படம்
கொல்லங்கோடு அருகே அரசு பஸ் டிரைவர் மண்டை உடைப்பு
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (49). இவர் அரசு பஸ் டிரைவர்.நேற்று முன்தினம் இரவு இவர் தடம் எண் 82 எம் என்ற அரசுபஸ்ஸை கொல்லங்கோட்டிலிருந்து படந்தாலுமூட்டிற்குஇயக்கியுள்ளார்.அப்போதுவள்ளவிளைகோயில்வளாகம் பகுதி சேர்ந்த மீன்பிடி தொழிலாளி சுனில் (46) என்பவர் பஸ்ஸில் ஏறி களியக்காவிளைக்கு டிக்கட் கேட்டிருக்கிறார். கண்டக்டர் இந்த பஸ் கலியக்காவிளை போகாது என்று கூறியதால் ஆத்திரமடைந்த சுனில் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்து அவரை உதைத்துள்ளார்.இந்த நிலையில் அடுத்த பஸ் ஸ்டாப் வந்ததும் கண்டக்டரை மிதித்த சுனிலை டிரைவர் விஜயகுமார் பஸ்ஸிலிருந்து கீழே இறக்கி விட்டுள்ளார்.கீழே இறங்கிய சுனில் தரையில் கிடந்த கல்லை எடுத்து டிரைவரின் தலையில் தாக்கியுள்ளார். இதில் டிரைவர் தலையில் காயம் ஏற்ப்பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு கொல்லங்கோடு போலீசார் சென்று சுனிலை பிடித்தனர் காயமடைந்த டிரைவர் விஜயகுமார் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுனிலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

Tags

Next Story