காடையாம்பட்டி அருகே நடந்து சென்றவர் மீது பைக் மோதி உயிரிழப்பு

காடையாம்பட்டி அருகே நடந்து சென்றவர் மீது பைக் மோதி உயிரிழப்பு

காவல் நிலையம்

காடையாம்பட்டி அருகே நடந்து சென்றவர் மீது பைக் மோதி உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள சந்தைப்பேட்டை அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்த சின்னு மகன் கந்தசாமி 80 வயதான இவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் சந்தைப்பேட்டை பொம்மிடி செல்லும் சாலையில் பொம்மியம்பட்டி பிரிவு என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக ஹோண்டா சைன் என்ற இருசக்கர வாகனம் அதிவேகமாக வந்து இவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

Tags

Next Story