பாஜக மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்பு

இராசிபுரம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாநாட்டுக்கு ஏராளமானோர் சென்றனர்.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாநில துணைத்தலைவர் & சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் Dr.K.P இராமலிங்கம்ExMP, அவர்களின் தலைமையில் மாநிலத் தலைவர் திரு K.அண்ணாமலை IPS அவர்களின் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா மாநாட்டிற்கு வருகை தரும் நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ள இராசிபுரம் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இன்று காலை 10 மணியளவில் இராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் இருந்து 12 வேன், 2 பஸ்களில் இராசிபுரம் நகரத்திலிருந்து ஏராளமான கட்சி தொண்டர்களை அழைத்து சென்றனர். இவ்விழாவில் நகர தலைவர் பி.வேலு, துணை தலைவர் குமார் ,மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story