ஊத்துக்கோட்டையில் குட்கா கடத்தியவர் கைது

ஊத்துக்கோட்டையில் குட்கா கடத்தியவர் கைது

கோப்பு படம்

ஊத்துக்கோட்டையில் குட்கா கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

ஆந்திராவில் இருந்து ஊத்துக்கோட்டை வழியே, தமிழகத்திற்கு குட்கா புகையிலைப் பொருட்கள் கடத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. ஊத்துக்கோட்டை போலீசார் தமிழக - ஆந்திர எல்லையான அண்ணாநகர் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

இதில் அவ்வழியே வந்த அரசு பேருந்தை சோதனை செய்ததில், அதில் பயணம் செய்த ஒதப்பை கிராமத்தைச் சேர்ந்த மாயவேணு, 61 என்பவரிடம் 9 கிலோ ஹான்ஸ் இருந்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story