சிவகாசி அருகே ஒருவர் கைது

சிவகாசி அருகே ஒருவர் கைது
சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயார் செய்த நபர் கைது...
சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயார் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர். சிவகாசி நகர் காவல் நிலைய போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.அப்போது சித்துராஜபுரத்தில் தனியார் காம்பவுன்டியில் சேர்மசங்கர்(37) என்பவர் பேன்சி ரக வெடிகளை தயாரித்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

மேலும் அப்பகுதியை காவல்துறையினர் சோதனை செய்த போது சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த பேன்சிரக வெடிகள் தயார் செய்ய பயன் படும் மணி மருந்தை கைப்பற்றிய சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் சேர்மசங்கர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story