வெள்ளகோவில் அருகே பஞ்சு பேல் ஏற்றி வந்தவன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

வெள்ளகோவில் அருகே பஞ்சு பேல் ஏற்றி வந்தவன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

தீ விபத்து

வெள்ளகோவில் அருகே நாகம நாயக்கன்பட்டியில் பஞ்சு பேர் ஏற்றி வந்த வேன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரைச் சேர்ந்தவர் செவடமுத்து சொந்தமாக மேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்த நிலையில் ஊத்துக்குளியில் இருந்து ஓபன் எண்டு நூல் மில்லுக்கு தேவைப்படும் கழிவு பஞ்சு பேல்களை ஏற்றிக்கொண்டு வேன் புறப்பட்டது.வேனை திருவாரூரைச் சேர்ந்த மோகன் ஓட்டி வந்தார். அந்த வேன் வெள்ளகோவில் நாகமநாயக்கம்பட்டி சந்துரு என்பவருடைய ஸ்ரீஹரி டெக்ஸ்டைல்ஸ் நூல் மில்லுக்கு சென்று கொண்டிருந்தது.

அப்போது நாகமநாயக்கம்பட்டி அருகில் உயரமாக ஏற்றப்பட்டிருந்த பஞ்சு பெயில்களில் மின்கம்பிகள் உரசி உள்ளது.இதில் தீப்பிடித்து பஞ்சு பேல்கள் மற்றும் மினி லாரியின் பெரும்பகுதிகள் எரிந்து சேதம் அடைந்தது. விபத்து பற்றிய தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகரன் தலைமையில் தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து வெள்ளகோயில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story