சகோதரியின் தாலி செயினை திருடிய அண்ணன்

சகோதரியின் தாலி செயினை திருடிய அண்ணன்
வெள்ளிச்சந்தை போலீஸ் (பைல் படம் )
வெள்ளி சந்தை அருகே தங்கையின் கழுத்தில் கிடந்த தாலி செயினை அண்ணன் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே பெரும்செல்வ விளை பகுதியை சிறந்தவர் அஜிஸ் மனைவி சஜிதா (24). சஜிதாவின் அண்ணன் சஜன் குமார் (26) என்பவர் சாமியார் மடம் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவ தினம் சஜிகுமார் தனது தங்கையை பார்ப்பதற்காக சஜிதாவின் வீட்டிற்கு வந்தார். அன்றி இரவில் அங்கேயே தங்கியிருந்தார். மறுநாள் காலையில் சஜிதா எழுந்து பார்த்தபோது தனது கழுத்தில் கிடந்த 23 கிராம் தாலி செயினை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள்ளே பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையே வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கணவர் அஜீஸ் பைக்கும் மாயமாகி இருந்தது.

இருவரும் சேர்ந்து பார்த்தபோது சஜிதாவின் அண்ணனும் மாயமாகி விட்டது தெரியவந்தது. விசாரணையில் வீட்டில் தங்கிய அண்ணன் சஜின் குமார் நள்ளிரவில் எழுந்து கழுத்தில் கிடந்த தாலி செயினை பறித்து, வீட்டில் இருந்த பைக்கை எடுத்துவிட்டு மாயமாகியுள்ளது தெரிய வந்தது. சொந்த அண்ணனே இப்படி திருட்டில் ஈடுபட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சஜிதா இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சஜிதாவின் அண்ணன் சஜின் குமார் என்பவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story