மரத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

மயிலாடுதுறை அருகே அன்னவாசல் கிராமத்தில் புளிய மரத்தில் புளியம்பழம் உலுக்கிய போது தவறி விழுந்தவர் சிகிச்சை பலநின்றி உயிரிழந்தார்.


மயிலாடுதுறை அருகே அன்னவாசல் கிராமத்தில் புளிய மரத்தில் புளியம்பழம் உலுக்கிய போது தவறி விழுந்தவர் சிகிச்சை பலநின்றி உயிரிழந்தார்.
மயிலாடுதுறை அருகே அன்னவாசல் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஞான ஒளி (50)இவர் கூலித்தொழிலாளியாவார். கடந்த ஏழாம் தேதி அன்று மதியம்அவரது வீட்டு கொல்லையில் உள்ள புளிய மரத்தில் ஏறி புளியம்பழம் உலுகக்கினார், அப்பொழுது எதிர்பாரா விதமாக கிலாவழுக்கி மறத்திலிருந்து தவறி தரையில் விழுந்து படுகாயம் அடைந்தார். அதனால் அவரது முதுகு தண்டுவடம், கழுத்து, விலா பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். இது குறித்து ஞான ஒளியின் மனைவி கஸ்தூரி அளித்த புகாரின்ன் பேரில் பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Tags

Next Story