தச்சநல்லூரில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கிடந்த நபர்

தச்சநல்லூரில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கிடந்த நபர்

கொலை சம்பவம்  

தச்சநல்லூர் அருகே முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கிடந்த நபர் - கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை தச்சநல்லூர் வடக்கு புறவழி சாலை பகுதியில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலம் அருகே முகம் சிதைக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்த கிடைப்பதாக தச்சநல்லூர் போலீசருக்கு அப்பகுதியில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் உயிரிழந்த நபர் தச்சநல்லூர் தளவாய்புரத்து சேர்ந்த சோலை ( 45 ) என்பதை கண்டறியபட்டதுடன். உயிரிழந்த ஆண் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டதுடன் தச்சநல்லூர் போலீசார் கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலில் நள்ளிரவு நேரத்தில் இரண்டு ஆண்கள் ரயில்வே தண்டவாளம் அருகே தொடர்ந்து சண்டையிட்டு வந்ததாகவும் அப்போது ஒருவருக்கொருவர் மாறி மாறி கல்லை கொண்டு தாக்கி கொண்டதாகவும் போலீசாரிடம் அப்பகுதியில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர் இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு மேற்கொண்டு கொலையை செய்தவர்கள் யாரென போலீஸார் தேடி வந்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் இருந்து தடயங்கள் சேகரிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. கொலைக்கான காரணம் என்ன என்பது தொடர்பாகவும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story