பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபர் கைது

பெரம்பலூர் மற்றும் பாடாலூரில் நடந்த திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர் மற்றும் பாடாலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியை மாவட்ட காவல் துறை சார்பில் தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை செயதும் மேலும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் திருட்டில் ஈடுபட்டது, திருச்சி மாவட்டம் துறையூர் விநாயகர் தெரு பகுதி சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் லோகேஷ்வரன் 38 என்பது தெரியவந்ததது. அவரை பிடித்து விசாரணை செய்ததில் குற்றவாளி துறையூர், திருச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு அவர்மீது பிடி ஆணை உள்ளதும் விசாரணையில் தெரியவந்த நிலையில், மேலும் குற்றவாளி பெரம்பலூர் மற்றும் பாடாலூர் குற்ற திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நபர் என்பதும், தெரியவந்தது, இதில் அவரிடம் 15.5 சவரன் நகை மற்றும் 15000 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து பெரம்பலூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி மேற்பார்வையில் குற்றவாளியை பெரம்பலூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் கலா திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.

Tags

Next Story