வெள்ளியணை அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர் கைது

வெள்ளியணை அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர் கைது

காவல் நிலையம்

வெள்ளியணை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்,தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக, பெண் காவல் உதவி ஆய்வாளர் சசிகலாவுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மே 24ஆம் தேதி மாலை 5 மணி அளவில், வெள்ளியணை காவல் எல்லைக்குட்பட்ட, லிங்கத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது லிங்கத்தூர் பஸ் ஸ்டாப் பகுதியில் கோலிசோடா கடை நடத்தி வரும், உப்பிடமங்கலம் பகுதியைச் சேர்ந்த நல்லுசாமி என்பவரது கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்,

இது தொடர்பாக நல்லுசாமியை கைது செய்து,அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவரை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags

Next Story