சாலையை கடக்க முயற்சி செய்தவர் மீது கார் மோதி விபத்தில் பலி

சாலையை கடக்க முயற்சி செய்தவர் மீது கார் மோதி விபத்தில் பலி

விபத்து

விருதுநகரில் சாலையை கடக்க முயற்சி செய்தவர் மீது கார் மோதி விபத்தில் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், மீசலூர் பகுதியைச் சார்ந்தவர் பாண்டியன் வயது 30 இவர் விருதுநகரில் உள்ள மெயின் பஜார் பகுதியில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது தினமும் கிராமத்திலிருந்து மெயின் பஜார் வேலை செய்யும் இடத்திற்கு பேருந்தில் வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி இரவு வேலை முடித்துவிட்டு பாண்டியன் மாத்தநாயக்கன்பட்டி சாலை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்த பொழுது விருதுநகர் சேர்ந்த சிவசக்திவேல் என்பவர் ஓட்டி வந்த கார் அஜாகிரதியாக ஓட்டிவரப்பட்டு பாண்டியன் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் பாண்டியன் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது அங்கு சிகிச்சையில் இருந்த பாண்டியன் உயிரிழந்த நிலையில் இந்த விபத்து குறித்து பாண்டியனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காரை அஜாக்கிரதையாகவும் அதிவேகமாகவும் ஓட்டிய விருதுநகர் சார்ந்த சிவசக்தி வேல் என்பவர் மீது சுரக்கரை காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story