தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி பலி

தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி பலி
போலீசார் விசாரணை 
குளத்தூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் மீது ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல்லை அடுத்த குளத்தூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் மீது சாளுக்கியாவில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story