தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி பலி!

தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி பலி!

பலி 

வாலாஜா மற்றும் சோளிங்கர் ரயில் நிலையத்திற்கு இடையே கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ரயில் நிலையத்திற்கும் சோளிங்கர் ரயில் நிலையத்திற்கும் இடையே ஆண் பிணம் கிடப்பதாக காட்பாடி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு கிடந்த பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் தண்டவாளத்தை கடக்கும்போது ஜோலார்பேட்டையில் இருந்து ரேணிகுண்டா வரை செல்லும் சரக்கு ரயில் மோதி இறந்துள்ளார். அவருடைய உடல் அங்கிருந்து 50 மீட்டர் தூரம் வரை ரெயில் இழுத்து சென்றுள்ளது. இறந்தவருக்கு சுமார் 50 வயது இருக்கும். இதுகுறித்து காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story