முத்துப்பேட்டை அருகே பேருந்துக்காக காத்திருந்தவர் உடல் நசுங்கி பலி

முத்துப்பேட்டை அருகே பேருந்துக்காக காத்திருந்தவர் உடல் நசுங்கி பலி

முத்துப்பேட்டை அருகே பேருந்துக்காக காத்திருந்தவர் உடல் நசுங்கி பலி

லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே பாண்டிசத்திரம் கிழக்கு கடற்கரை சாலை பேருந்து நிலையம் அருகே நாகப்பட்டினத்தில் இருந்து மீன் ஏற்றிக்கொண்டு காரைக்குடி நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. அப்பகுதியில் வேகத்தடை இருந்தது. தெரியாமல் லாரி சென்றதால் திடீரென்று நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த பேருந்து நிழலகத்துக்குள் லாரி புகுந்து விபத்துக்குள்ளானது. அப்போது அங்கு பேருந்துக்காக காத்திருந்த பாண்டி செம்பியமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் வயது 55 .இவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். எடையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாலசுப்பிரமணியமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விபத்து ஏற்படுத்திய காரைக்குடி ரஸ்தா பகுதியைச் சேர்ந்த டிரைவர் குமார் மகன் முருகன் என்பவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story