பாம்பு கடித்து ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

பாம்பு கடித்து ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதி

திண்டுக்கல் அருகே கனக்கம்பட்டியில் பாம்பு கடித்து ஒருவர் மருத்துவமனையில் அனுமதி. திண்டுக்கல் முத்தழகுப்பட்டி பகுதியைச் சேர்ந்த சவரி ஞான பிரகாசம் என்பவரின் மகன் ராஜேந்திரன் வயது 38. இவர் கணக்கம்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த பாம்பு அவரது வலது காலில் கடித்தது. பாம்பு கடித்ததை அறிந்த அவர் மயக்கம் போடவே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேலும் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

Tags

Next Story