சட்டவிரோதமாக குட்கா பொருள் விற்பனை செய்த ஒருவர் கைது

சட்டவிரோதமாக குட்கா பொருள் விற்பனை செய்த ஒருவர் கைது
குட்கா விற்பனை
புதுக்கோட்டை மாவட்டம், முத்து குளம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்து குளம் கிராமத்தில் பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு சோதனை செய்த கந்தர்வகோட்டை போலீசார் அங்கு சட்ட விரோதமாக குட்கா பொருள்கள் விற்பனை செய்த செங்கோடன் வயது 25 என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அந்தப் பெட்டிக்கடையில் இருந்த 5 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றினர் காவல்துறையினர்.

Tags

Next Story