அனுமதி இன்றி மணல் கடத்தியதாக ஒருவர் கைது!

அனுமதி இன்றி மணல் கடத்தியதாக ஒருவர் கைது!

மணல் கடத்தல் 

இலுப்பூர் சுற்றுவட்டார பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலுப்பூர் சுற்றுவட்டார பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்துவதாக இலுப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையாடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் உள்ளிட்ட போலீசார் கலிங்கப்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது பட்டையான்குளம் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்திய டிப்பர் லாரியையும் மணல் ஏற்ற பயன்படுத்திய ஹிட்டாச்சி இயந்திரத்தையும் பறிமுதல் செய்த போலீசார் குரும்பட்டியை சேர்ந்த பழனிவேல் மகன் கோபிநாத் (வயது-24) என்பவரை கைது செய்தனர்

Tags

Next Story