ஆலங்குளம் அருகே நடந்து சென்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே நடந்து சென்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு
மதுக்கடையில் மது வாங்கி நடந்து சென்றவர் தவறி விழுந்து உயிரிழந்தார்
ஆலங்குளம் அருகே மதுக்கடையில் மது வாங்கி நடந்து சென்றவர் தவறி விழுந்து உயிரிழந்தார்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டையை சேர்ந்த அழகர் (50) இவர் பரங்குன்றாபுரம் மதுக்கடையில மதுவாங்க நடந்து சென்றபோது மதுக்கடை முன்பு திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார்.

இதற்கண்டா பகுதி பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர், விரைந்து சென்ற சுரண்டை போலீசார் பரிசோதித்து பார்த்ததில் உயிர் பிரிந்தது தெரியவந்தது. இவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

இது குறித்து சுரண்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story