பழனியில் சாமி கும்பிட வந்தவர் உடல் நலக்குறைவால் பலி

பழனியில் சாமி கும்பிட வந்தவர் உடல் நலக்குறைவால் பலி

பலியான பக்தர்

பழனி முருகன் கோயிலுக்கு குடும்பத்துடன் சாமி கும்பிட வந்தவர், திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வடமதுரையைச் சேர்ந்த முருகன் (51) என்பவர் தனது குடும்பத்தினருடன் பழனி முருகன் கோயிலுக்கு வருகை தந்திருந்தார். படிப்பாதை வழியாக குடும்பத்தினர் அனைவரும் கோயிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென முருகனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதைக்கண்ட கோயில் பணியாளர்கள் உடனடியாக அவரை ரோப் கார் மூலமாக மலை உச்சியில் இருந்து அடிவாரத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் திருக்கோயில் ஆம்புலன்ஸ் மூலம் பழனி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர்.

அங்கு முருகனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்ட அவரது குடும்பத்தினர் கதறி அழுத காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

Tags

Next Story