துடையூரில் மன உளைச்சலில் விஷம் குடித்தவர் உயிரிழப்பு

துடையூரில் மன உளைச்சலில் விஷம் குடித்தவர் உயிரிழப்பு

காவல் நிலையம் 

திருச்சி மாவட்டம் துடையூரில் மன உளைச்சலில் விஷம் குடித்தவர் உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே துடையூர் வடக்குத் தெருவை சேர்ந்தவர் 49 வயதான ரவி.இவர் மது போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.மேலும் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 22 ம் தேதி விஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிறுகாம்பூர் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்ஞி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று. இரவு பரிதாபமாக உயிழந்தார். பின்னர் இச்சம்வம் குறித்து வாத்தலை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Tags

Next Story