புலியூர் அருகே மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

புலியூர் அருகே மயங்கி விழுந்தவர் உயிரிழந்ததை காவல்துறை வழக்கு பதிவு செய்தனர்.
புலியூர் அருகே மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் சபாபதி மகன் செந்தில்குமார் வயது 51. இவர் மே 6ஆம் தேதி இரவு 7 மணியளவில், அவரது வீட்டில் இருந்தபோது, திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த செந்தில்குமார் மனைவி ஜீவரத்தினம் வயது 47 என்பவர், இதுகுறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த செந்தில்குமார் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Tags

Read MoreRead Less
Next Story