புகையிலை பொருட்களை பதுக்கியவர் கைது

தென்காசி அருகே புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவன் கோவில் தெருவில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து நேற்று ஆழ்வார் குறிச்சி காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து சட்டவிரோதமாக விற்பனைக்காக புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருந்த பலவேசம் மகன் கள்ளபிரான் (71) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த ரூபாய் 1, 05, 600 மதிப்பிலான 198 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story