திருப்பூரில் ஆன்லைனில் இயர்போன் ஆர்டர் செய்தவருக்கு பவுடர் டப்பா வந்ததால் அதிர்ச்சி!

திருப்பூரில் ஆன்லைனில் இயர்போன் ஆர்டர் செய்தவருக்கு பவுடர் டப்பா வந்ததால் அதிர்ச்சி!

பவுடர் டப்பா

திருப்பூரில் ஆன்லைனில் இயர்போன் ஆர்டர் செய்தவருக்கு பவுடர் டப்பா வந்ததால் அதை ரிட்டன் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்.
திருப்பூர் கே வி ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (33). பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 14ஆம் தேதி ஆன்லைனில் 402 ரூபாய் மதிப்புள்ள இயர் போன் ஆர்டர் செய்துள்ளார். நேற்றைய தினம் பார்சல் வந்த நிலையில் சிறிது நேரம் கழித்து பிரித்துப் பார்த்தபோது அதன் உள்ளே 30 ரூபாய் மதிப்புள்ள பவுடர் டப்பா மட்டும் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வேல்முருகன் பொருளை ரிட்டன் செய்ய முயன்ற போதும் பொருள் மாற்றி இருந்ததால் அதனை ரிட்டர்ன் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்.

Tags

Next Story