குடியாத்தம் அருகே மது குடிக்க பணம் தர மறுத்தவருக்கு பீர்பாட்டில் குத்து

குடியாத்தம் அருகே மது குடிக்க பணம் தர மறுத்தவருக்கு பீர்பாட்டில் குத்து

காவல் நிலையம் 

குடியாத்தம் அருகே மது குடிக்க பணம் தர மறுத்ததால் பீர் பாட்டிலால் வாலிபரை குத்திய நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தை சார்ந்தவர் ஆதவன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 29-ந் தேதி இரவு ஆதவன் தனது அண்ணன் தேவேந்திரனுடன் பச்சையம்மன் கோவில் அருகே தள்ளுவண்டி கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த நான்கு பேர் ஆதவனிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளனர். அதற்கு ஆதவன் பணம் இல்லை என மறுத்துள்ளார்.அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பீர் பாட்டிலை உடைத்து மார்பில் குத்தி உள்ளனர். இதில் காயமடைந்த ஆதவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டை பாண்டியன் தெருவை சேர்ந்த விஜி என்கிற டோமு (26) என்பவரை தேடி வந்த நிலையில் இன்று போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட சிலரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story