மது விற்பனை செய்த நபர் கைது!

மது விற்பனை செய்த நபர் கைது!

 கைது

மின் மோட்டார் அறையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா சுருட்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 36), இவர் மின் மோட்டார் அறையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தூசி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story