வெளிமாநில மது பாக்கெட்டுகள் விற்றவர் கைது !

வெளிமாநில மது பாக்கெட்டுகள்  விற்றவர் கைது  !

கைது

திருப்பத்தூர் டிஎம்எஸ் காலனி பகுதியில் வெளிமாநில மது பாக்கெட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் டிஎம்எஸ் காலனி பகுதியில் வெளிமாநில மது பாக்கெட்டுகள் விற்றவர் கைது. திருப்பத்துார் நகர போலீசார் திருப்பத்தூர் நகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டிஎம்எஸ் காலனி பகுதியில் சந்தேகத்தின் பேரில் இருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில், அதே பகுதியை சேர்ந்த பசுபதி(27).என்பதும்,இவர் வெளி மாநில மது பாக்கெட்டுகளை விற்பனை செய்வது தெரிந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். முன்னதாக அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மதிப்பிலான வெளி மாநில மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story