அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்தவர் கைது

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்தவர் கைது

கைதானவர்

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.
அருமனை அருகே செரியக்கொல்லை பகுதியில் உள்ள கடையில் போதை பாக்குகள் மற்றும் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதாக அருமனை போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள ஹோல்சேல் கடையில் சோதனை செய்தபோது, போதை பாக்குகள் மற்றும் அனுமதியின்றி அதிகளவில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அந்த கடையின் உரிமையாளர் கடையால் கரிக்காமன் கோடு பகுதியை சேர்ந்த ராஜசேகரன் என்பது தெரியவந்தது.இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் 13 போதை பாக்கு பாக்கெட் டுகளை மற்றும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story