திண்டிவனத்தில் சோப்பு பவுடர் கடையில் திருடியவர் கைது

திண்டிவனத்தில் சோப்பு பவுடர் கடையில் திருடியவர் கைது

கைது செய்யப்பட்ட வாலிபர்

திண்டிவனத்தில் சோப்பு பவுடர் கடையில் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ராஜம்பேட்டை தெருவை சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன் மகன் கவுதம் சீனுவாசன் (வயது 34). இவர் திண்டிவனம் சஞ்சீவிராயன் பேட்டையில் சோப்பு பவுடர் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இவரது கடையில் இருந்த ஒரு லேப்டாப், ஸ்கூட்டர் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக் கம் ஆகியவற்றை யாரோ மர்மநபர் திருடிச்சென்றுவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் சீனுவாசன் கடையில் கைவரிசை காட்டியது விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அடுத்த காந்திநகரில் உள்ள பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அபுபக்கர் என்ற அக்பர் அலி (23) என்பது தெரிய வந்தது புதுமை இடத்தை அவரிடம் இருந்து லேப்டாப்பை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story