கடன் தொல்லையால் தற்கொலைக்கு முயன்றவர் பலி

கடன் தொல்லையால் தற்கொலைக்கு முயன்றவர் பலி

தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் கடன் தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் ரகுராம் (30). இவர் தனியார் வங்கியில் கடன் வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடன் தொல்லை அதிகமானதால் கடந்த 27ஆம் தேதி விஷம் அருந்தி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று (மே 3) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்த அம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story